Thursday, September 30, 2010

உயர்ந்த மனிதன்

ணக்கார வாலிபன் ராஜு, ஏழைப் பெண் பார்வதியை மணக்கிறான். ஆனால், அவன் தந்தையின் பரம்பரைக் கௌரவமும், திமிரும் அந்தத் தம்பதியைக் கொடூ ரமாகப் பிரிக்கின்றன. காதல் களத்தில் வீரனாகத் திரிந்த ராஜு, வாழ்க்கையில் கோழையாகி, மறுமணம் புரிந்துகொள்கிறான். ஆனாலும், முதல் மனைவியைப் பற்றியே எண்ணி எண்ணிக் குமைந்து மறுகுகிறான்.
இடையே விதி விளையாடி, அவன் முதல் மனைவியின் மகனே அவனிடம் வேலைக்காரனாகப் பணிபுரிய வருகிறான். இறுதியில் மகனும் தந்தையும் ஒன்று சேரு கின்றனர்.
சிவாஜியின் பாத்திர அமைப்பும், நடிப்பும் தனிச்சிறப்புப் பெற்று விளங்குகின்றன. வெறுப்பையும், அன்பையும் சேர்த்துக்காட்டி நடிக்க முடியுமா? சிவாஜியால் முடியும்! உதாரணத்திற்கு ஒன்று... "இந்தக் குடும்பம், எங்க குடும்பத்துக்கிட்டே இருபது வருஷமா அடிமையா இருக்காங்களாம்! பிளடிஃபூல்ஸ்!" என்று சுந்தர்ராஜனைத் திட்டும் காட்சி.
இயற்கையான நடிப்பு என்ற சொற்களெல்லாம் இனி சிவாஜிக் குப் போதாது போலும்! காரசார மான சாப்பாட்டை அவர் சாப் பிடும்போது, நம் கண்களிலும் கண்ணீர் வருகிறது.
சினிமாவில் வரும் இரண்டா வது மனைவி வில்லியாக இருப் பதும், கதாநாயகன் தனது இரண் டாவது மனைவியிடம் வெறுப்புடன் நடந்துகொள்வதும்தான் வழக்கம். இந்தப் படத்தில் அது மாறுபட்டு, இயற்கையாக இருக் கிறது. சிவாஜி-சௌகார் இருவ ரின் கதாபாத்திரங்களும் தனித் தன்மை கொண்டவை. கதையில் வரும் எல்லோருமே நல்லவர் களாக இருக்கிறார்கள். அதுவே ஒரு குறையோ?!
சௌகார் ஜானகி, இப்போது வரும் பல இள நடிகைகளைவிட அழகாகவும், இளமையாகவும் இருக்கிறார்.
நடிப்பில் இரண்டாவது பரிசுக்கு அசோகனும் சௌகார் ஜானகியும் போட்டி போடுகிறார்கள்.
நகைச்சுவைக் காட்சிகள் குறைவாக இருந்தாலும் நிறைவைத் தருகின்றன. "இங்கிலீஷில் சாயத்துக்கும் டை, சாவதற்கும் டை என்கிறார்களே!" என்று வி.கே.ராமசாமி அழகாக அலுத்துக் கொள்கிறார்.
'அந்த நாள் ஞாபம் நெஞ்சிலே' என்ற வசன கவிதை புதுமையாக இருந்ததும், ஏனோ ரசிக்கும்படி யாக இல்லை. பின்னணி சப்தம் அதிகமாக இருப்பதுதான் கார ணமோ?
உயர்ந்த மனிதன் உள்ளத்தைக் கவருகிறான்.
நன்றி விகடன் : 15 /12 /1968 

Monday, September 27, 2010

அருகில் மிக அருகில்...

என் தோட்ட மலர்கள் மிக அருகாமையில் எடுத்து வீடியோவாக கன்வெர்ட் செய்த பொது...

Sunday, September 26, 2010

கலைஞர் பொய்யரா?

கலைஞர் பொய்யரா?
ஆம். நான் சொல்லவில்லை. பெரியார் சொல்கிறார். இதோ:
தேர்தலில் நிற்காமல் தொண்டாற்றி வருவது ஏன்?
நான் 1925 இல் காங்கிரசை விட்டு வெளியே வந்தேன். வந்தது முதல் ஜாதி ஒழியவேண்டும். நம் மக்களிடையே இருக் கிற இழிவு, மானமற்ற தன்மை ஒழிய வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டு சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தேன்.




தேர்தலில் ஈடுபட்டால் மக்களிடையே உண்மையைக் கூற முடி யாது




. ஆகையால், தேர்தலுக்கு நிற்கக் கூடாது என்று கொள்கை வைத்துத் தொண்டாற்றி வருகின்றேன். தேர்தலில் ஈடுபடாத காரணத்தினால்தான் நான் உங்களைக் காட்டுமிராண்டிகளே என்று அழைத்து, உங்களின் இழிநிலையை எடுத்துக் கூற முடிகிறது. இப்படிக் கூறி விட்டு உங்களிடம் வந்து நான் ஓட்டுக் கேட்டால், நீங்கள் என்ன சொல்வீர்கள்.
அயோக்கியன்! எங்களை காட்டுமிராண்டி என்று சொல்லிவிட்டு வோட்டு வேறு கேட் கிறாயா? என்று திருப்பிக் கேட்பீர்களா? இல்லையா? அதோடு நான் உண்மையை உங்களிடம் சொல்ல முடியாது என்பதால் தேர்தலில் நிற்காமல் தொண்டாற்றி வருகின்றேன்.
(விடுதலை, 13.11.1968)

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!


ரூம் போட்டு யோசிச்சாலும் கண்டு பிடிக்கவே முடியாதுங்க இந்த விபத்து எப்படி ஆச்சுன்னு. நண்பர் ஒருவர் மாலை ஏழு மணி அளவில், திருநள்ளார் சனிஸ்வரன் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தார். தெரு விளக்கு ஏதும் இல்லை. முன்னால் கோயில் குட்டி யானை சென்று கொண்டிருந்தது. தெரியாமல் தலைவர் யானையின் காலை இடித்துவிட்டார். யானை பாவம் காரில் உட்கார்ந்து விட்டது. கார் அப்பளமாகியது!. நல்ல வேளை காரைத் தவிர எந்த சேதமும் ஏற்படவில்லை! அட போங்கப்பா விபத்து எப்படியெல்லாம் வருது- தாய் யானை சொல்லியிருக்குமோ!

Thursday, September 23, 2010

யந்திரனும் வாலிபனும்

உலகம்  சுற்றும்  வாலிபனும்  யந்திரனும்....

இரண்டிலுமே கதாநாயகன் மேல் மாடி காலி
இரண்டுமே science fiction கதைகள் (கதாநாயகன் இரண்டிலுமே scientist அதனால்தான்)
இரண்டுமே Big Budget படங்கள்.
வாலிபன் பஞ்ச் டயலாக்: அவங்க யாராட்சி யாராட்சி ன்றாங்க. நீங்க ஆராச்சி ஆராச்சி ன்றீங்க
இரண்டுமே ஒன் லைன் ஸ்டோரி: கதாநாயகன் கண்டு பிடிப்பதை கதாநாயகனே  அழிப்பது.
இரண்டுமே தொழில் நுட்பத்தின் டாப் கியர்கள்
இரண்டிலும் மக்கள் மனம் கவர்ந்த கதாநாயகர்கள்
வாலிபன் வெற்றி வாகை சூடினான் . யந்திரன்?
இரண்டின் ரசிகர்களும் பால் அபிஷேகம் செய்யும் பார்ட்டிகள்.
வாலிபன் பாடல்கள் என்றும் மனதில் நிற்பவை.

Friday, September 17, 2010

நாலு பேருக்கு நன்றி

4-4+4-4=0
4/4+4-4=1
4/4+ 4/4=2
4/4+ 4/√4=3
4/√4+4/√4=4
(4)(4-4)+4=5
4+(4+4)/4=6
4+4-(4/4)=7
4+4+(4-4)=8
4+4+(4/4)=9


Wednesday, September 15, 2010

பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே நறு மணம் உண்டா?

- முத்துராமனிடம்தான்  கேட்க வேண்டும்
- என்னய்யா இன்னமுமா  இந்தக்க் கேள்விக்கு விடை தெரியல?
- எத்தனை பெண்களுக்கு இயற்கையிலேயே கூந்தல் இருக்கு?
- பொற்காசைத்தான் தருமிக்கு கொடுத்தாச்சே இனிமே பதில் சொல்லி என்னே பயன்?
- சாரி பிரதர், ரெண்டு நாளா மூக்கு ஒன் வே traffic
- எனக்கில்லை எனக்கில்லை, வலையத்த்தில எல்லாரும் இந்த பதிவை பத்துட்டான்களே, எனக்கு இல்லவே இல்லை
- எங்க வீட்டு பொம்பளைக்கு உண்டு (பொய் சொன்னாத்த்தான் போஜனம் கிடைக்கும்)
- மக்கள் குறை தீர்க்கும் GOOGLE   ஆண்டவா, பரம்பொருளே  நீ தாண்டா பதில் சொல்லனும்.
- காதலிக்கு நிச்சயமா உண்டு.
- மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் உண்டு.

Tuesday, September 14, 2010

கணினியின் 10 உபயோகங்கள்

- ஆபிசில் உங்களிடம் கணினி இருந்தால் ஏ.சி. கிடைக்கும்.
- உங்களிடம் தேங்கி உள்ள கோப்புகள் எத்தனை என்று மற்றவருக்கு தெரியாது
- கணினியுடன்  இணைய இணைப்பும் இருந்து விட்டால் கேட்கவே வேண்டாம். ஆடல் பாடல்களை கணினியில் கண்டு கொள்ளலாம், நண்பர்களுடன் சாட் செய்யலாம். உங்கள் பாஸ் எட்டிப் பார்க்கும் பொழுதெல்லாம் நீங்கள் உங்கள் சீட்டில்  இருப்பதால் உங்களுக்கு performance grading A +
- ஷேர் மார்க்கட்டில்  புகுந்து விளையாடலாம்.
- உங்களுக்கு வரும் முக்கிய பேப்பர்களை (உங்களுக்கு பிடிக்கதவைகளை  ) கணினி அடியில் தள்ளி விட்டு காணவில்லை என்று சோகம் காட்டலாம்.
- முக்கியமான ரிப்போர்ட் நீங்கள் தயார் செய்ய வில்லை ஆனால் பாஸ் கேட்கிறார். "Computer Crash " என்று அதன் மேல் பழி போடலாம்.
- உங்கள் அன்பு மனைவி அல்லது அன்புக்குரியவரின் புகைப்படத்தை screen saver ல் போட்டு வைக்கலாம்.
- பசங்களின் home work ஆபிஸ் கணினியில் போட்டு பசங்களுக்கு நல்ல மதிப்பெண் பெற்றுத்தரலாம்.
- வீட்டுக் கணக்கு (அதாங்க: பால், தயிர், மளிகை, இத்யாதி) போடா உபயோகமா இருக்கும்.

சுட்டான்... சுடுவேன்

சுட்டான்... சுடுவேன்
வலையத்தில் சூடான விவாதம் ஓடிக்கொன்டிடிருக்கிறது.. கமல் படங்கள் ஹாலிவுட்டிலிருந்து சுடப்பட்டவையா?
தமிழ் புராண படங்களைத்தவிர சுடாத படங்கள் என்று உண்டா? அப்படியிருக்க கமலை மட்டும் கை காட்டுவது நல்லதில்லை.
ஏசு நாதர் சொன்ன மாதிரி, இதுவரை சுடாத தயாரிப்பாளர் யாரவது கமல் மீதுது கல் எரியட்டும்..
எனக்குத் தெரிந்து கமல் மீது கல் விழ ஒரே காரணம்... அவர் ஒரு முன்னேறி வரும் பார்ப்பான்.