Showing posts with label mgr. Show all posts
Showing posts with label mgr. Show all posts

Sunday, October 3, 2010

பசுமாடும் தென்னை மரமும்

சின்ன வயசில படிச்ச ஒரு கதை:
ஸ்கூல் வாத்தியார் சொன்னார், பசு மாடு, தென்ன மரம், இந்த ரெண்டு கட்டுடைய படிங்க. அதில ஒன்னு நாளைக்கு பரிச்சயல வரும் என்றார். பையன் தென்ன மரத்த பத்தி படிச்சுட்டு போனான். கேள்வி பசு மாட்ட பத்தி. யோசிச்சான் பையன். பின்னர் கட்டுரைய இப்படி எழுதினான்:
"எங்கள் கிராமத்தில் பசு மாட்டை தென்ன மரத்தில் கட்டுவார்கள். தென்ன மரம் மனிதனுக்கு மிகவும் உதவிஉஆக இருக்கிறது...." என்று தென்னை புராணம் எழுதினான்.
அதே மாதிரி எனக்கு இந்த படலை கேட்கும் பொது இந்த கதை நினவு வரும். "எனக்கொரு மகன் பிறப்பான். அவன் என்னை போலவே இருப்பான்.. நிங்களும் இந்தப்பாட்டை கேட்டு மகிழவும்..

Thursday, September 23, 2010

யந்திரனும் வாலிபனும்

உலகம்  சுற்றும்  வாலிபனும்  யந்திரனும்....

இரண்டிலுமே கதாநாயகன் மேல் மாடி காலி
இரண்டுமே science fiction கதைகள் (கதாநாயகன் இரண்டிலுமே scientist அதனால்தான்)
இரண்டுமே Big Budget படங்கள்.
வாலிபன் பஞ்ச் டயலாக்: அவங்க யாராட்சி யாராட்சி ன்றாங்க. நீங்க ஆராச்சி ஆராச்சி ன்றீங்க
இரண்டுமே ஒன் லைன் ஸ்டோரி: கதாநாயகன் கண்டு பிடிப்பதை கதாநாயகனே  அழிப்பது.
இரண்டுமே தொழில் நுட்பத்தின் டாப் கியர்கள்
இரண்டிலும் மக்கள் மனம் கவர்ந்த கதாநாயகர்கள்
வாலிபன் வெற்றி வாகை சூடினான் . யந்திரன்?
இரண்டின் ரசிகர்களும் பால் அபிஷேகம் செய்யும் பார்ட்டிகள்.
வாலிபன் பாடல்கள் என்றும் மனதில் நிற்பவை.