Sunday, September 26, 2010

கலைஞர் பொய்யரா?

கலைஞர் பொய்யரா?
ஆம். நான் சொல்லவில்லை. பெரியார் சொல்கிறார். இதோ:
தேர்தலில் நிற்காமல் தொண்டாற்றி வருவது ஏன்?
நான் 1925 இல் காங்கிரசை விட்டு வெளியே வந்தேன். வந்தது முதல் ஜாதி ஒழியவேண்டும். நம் மக்களிடையே இருக் கிற இழிவு, மானமற்ற தன்மை ஒழிய வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டு சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தேன்.




தேர்தலில் ஈடுபட்டால் மக்களிடையே உண்மையைக் கூற முடி யாது




. ஆகையால், தேர்தலுக்கு நிற்கக் கூடாது என்று கொள்கை வைத்துத் தொண்டாற்றி வருகின்றேன். தேர்தலில் ஈடுபடாத காரணத்தினால்தான் நான் உங்களைக் காட்டுமிராண்டிகளே என்று அழைத்து, உங்களின் இழிநிலையை எடுத்துக் கூற முடிகிறது. இப்படிக் கூறி விட்டு உங்களிடம் வந்து நான் ஓட்டுக் கேட்டால், நீங்கள் என்ன சொல்வீர்கள்.
அயோக்கியன்! எங்களை காட்டுமிராண்டி என்று சொல்லிவிட்டு வோட்டு வேறு கேட் கிறாயா? என்று திருப்பிக் கேட்பீர்களா? இல்லையா? அதோடு நான் உண்மையை உங்களிடம் சொல்ல முடியாது என்பதால் தேர்தலில் நிற்காமல் தொண்டாற்றி வருகின்றேன்.
(விடுதலை, 13.11.1968)

1 comment:

  1. அட..என்ன ஒரு எதார்த்தமான உண்மையான தலைவர்.இது போன்ற தகவல்களை அடிக்கடி போடுங்கள்

    ReplyDelete