Friday, October 15, 2010

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளான இன்றைய தினத்தை (அக்டோபர் 15) ஐக்கிய நாடுகள் சபை உலக மாணவர் தினமாக அறிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் ராமேஸ்வரத்தில் பிறந்து திருச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களில்  கல்வி கற்று  நாட்டின் தலை சிறந்த அணுவியல் அறிஞராகவும், தொலைநோக்கு சிந்தனையாளராகவும் திகழும் அப்துல் கலாம் இந்திய குடியரசுத் தலைவராக மிகச்சிறப்பாக பணியாற்றினார்.  இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்களுக்கு முன்மாதிரி தலைவராக திகழும் அப்துல் காலம் உலகம் முழுவதும் இதுவரை 1 கோடி மாணவர்களை சந்தித்து உரையாற்றிவுள்ளார்.
 
மாணவர்கள் எதிர்காலத்தில் எப்படி வாழவேண்டும், நாட்டுக்கு எவ்வகையில் கடமையாற்ற வேண்டும் என்று தொடந்து திட்டங்களை வகுத்து, விளக்கம் கொடுத்து, எளிமையாக உரையாடி ஊக்கப்படுத்தி வரும் அப்துல் கலாம் போற்றப்படும்  உலகத் தலைவர்கள் ஒருவராக திகழ்கிறார். 
 
இந்நிலையில் அவரின் பிறந்த நாளான அக்டோபர் 15 ஆம் தேதியை உலக மாணவர் தினமாக அறிவித்துள்ள ஐ.நா. சபை அதிகாரப்பூர்வமாக உலகம் முழுவதும் இந்த நாளை மாணவர் தினமாக கொண்டாட அழைப்பு விடுத்துள்ளது. 
 
இந்த அங்கீகாரம் இந்தியாவின் தலைவர் ஒருவருக்கு இதுவரை கிடைக்காத ஒரு சர்வதேச ஒரு சிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது.  
நன்றி : தினமலர் 

No comments:

Post a Comment